Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். நண்பர்களுடன் கடலில் நீராட சென்ற இளைஞன் - இரண்டு நாட்களின் பின் சடலமாக மீட்பு


யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் ,  காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. 

ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் தாளையடி கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளை கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனார். 

இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக இளைஞனை அப்பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர்கள், கடலில் தேடிய நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இளைஞனின் சடலம் அப்பகுதியில் கரையொதுங்கியுள்ளது. 

அதனை அடுத்து மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். 

No comments