மிஹிந்தலை, மஹகிரின்னேகம பகுதியில் மனைவியின் தாக்குதலுக்கு இலக்கான கணவன் உயிரிழந்துள்ளார்.
கணவன் - மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மனைவி மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மிஹிந்தலை, மஹகிரின்னேகம பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான நபர் என தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மிஹிந்தலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






No comments