Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொங்கலை முன்னிட்டு திருநெல்வேலியில் அமுலுக்கு வரும் போக்குவரத்து நடைமுறை


தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்குடன் ஆடியபாதம் வீதியில் இராமசாமிப் பரியாரியார் சந்தியில் இருந்து திருநெல்வேலிச் சந்தி நோக்கி கனரக வாகனங்கள் மட்டும் உள்நுழைவதற்கு தடைசெய்து செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

பொங்கல் தினத்தினை முன்னிட்டு , பொருட்களை கொள்வனவு செய்வதற்கு திருநெல்வேலி சந்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் பெருமளவான மக்கள் கூடுவதனால் , வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. 

அந்நிலையில் வாகன நெரிசலை தவிர்க்கும் நோக்குடன் , நாளைய தினம் புதன்கிழமை ஆடியபாதம் வீதியில் இராமசாமிப் பரியாரியார் சந்தியில் இருந்து திருநெல்வேலிச் சந்தி நோக்கி கனரக வாகனங்கள் மட்டும் உள்நுழைவதற்கு தடைசெய்து குறித்த வீதியினை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 

இந்த நடைமுறை நாளைய தினம் புதன்கிழமை மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

No comments