Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து முன்னரே அறிந்திருந்த இந்தியா ?


ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகின்றதா என்ற அச்சம் வலுவடைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஈரான் கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மிலான் 2026 பயிற்சியில் பங்கேற்க வருகை தந்திருந்தனர். திட்டமிட்டபடி அமெரிக்கக் கடற்படையும் இதில் பங்கேற்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர்கள் பின்வாங்கியுள்ளனர்.

அதே காலகட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் கவனிக்கத்தக்க விடயமாக மாறியுள்ளது. ஈரான் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் இருந்ததாலேயே அமெரிக்கா இந்தப் பயிற்சியிலிருந்து விலகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமது நாட்டிற்கு அழைக்கப்பட்ட ஈரான் குழுவினர் மீது நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது குறித்து இந்திய உளவுத்துறையான ரோவிற்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்களை முன்கூட்டியே கணிக்கும் திறன் கொண்ட இந்தியா, இந்த ஆபத்தை அறிந்திருந்தும் ஈரான் கப்பலை வெளியேற அனுமதித்தது இந்தியாவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஈரானின் இரண்டாவது கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியபோது, அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். "இக்கப்பலை அனுமதித்தால் வான்வழியாகத் தாக்குதல் நடத்த நேரிடும்" என அவர்கள் அச்சுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புச் செயலாளர் துய்யகொந்தா, இக்கப்பல் விவகாரத்தில் இலங்கை பொறுப்பேற்க முடியாது என ஈரான் தூதருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.இருப்பினும் இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் பிரதி சபாநாயகர் உள்ளிட்டோர் ஜனாதிபதியைச் சந்தித்து அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர்.

நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் எட்டப்பட்ட உடன்பாட்டின் படி கப்பலை திருகோணமலைக்குக் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.கப்பலில் உள்ள நபர்களை மட்டும் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்து வர முடிவெடுத்துள்ளனர்.

மத்திய கிழக்கில் தனது இராணுவ பலத்தை இழந்து வரும் அமெரிக்கா, இஸ்ரேலைத் தவிர்த்து வேறு பாதுகாப்பான தளங்களைத் தேடி வருகிறது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புவிசார் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை ஒரு இராணுவ மையமாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதான சந்தேகம் எழுந்துள்ளது.முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி குறிப்பிட்டது போல, ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட மையப்புள்ளியாக இலங்கை இருப்பதே இதற்குக் காரணமாகும்.

ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகிறதா என்ற அச்சம் தற்போது வலுவடைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

No comments