அயலவர்களுடன் முரண்பட்டு , பெண்களுக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் ,அது தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனனுக்கும் , பிறிதொரு தரப்பினருக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த காணியினை அருச்சுனா இராமநாதன் நேற்றைய தினம் சனிக்கிழமை துப்பரவு செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுத்த வேளை மற்றைய தரப்பினரை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சிலர் , அங்கு சென்ற வேளை இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் திடீரென அருச்சுனா இராமநாதன் தனது கைத்துப்பாக்கியை எடுத்து , அவர்களை அச்சுறுத்தியுள்ளார். அது தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு , அது வைரலாகி உள்ளது.








No comments