Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளக்க மீண்டும் முயற்சி


தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். 

தையிட்டி விகாரை அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் காணி உறுதி பத்திரங்களை வைத்துள்ள 17 காணி உரிமையாளர்களின் காணிகளை அளவீடு செய்து காணி வரைபடங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதற்கான காணி அளவீடுகளை கடந்த 17ஆம் திகதி முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் . அன்றைய தினம் நில அளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் , காணி உரிமையாளர்கள் தையிட்டி விகாரை பகுதியில் கூடிய வேளை , பிக்குவின் பொலிஸ் முறைப்பாடு காரணமாக அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டன. 

இந்நிலையில் மீண்டும் 28ஆம் திகதி காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் , அன்றைய தினம் காணி உறுதி பத்திரங்களுடன் காணி அமைந்துள்ள பகுதிகளுக்கு காணி உரிமையாளர்கள் வருகைதந்து , தமது காணிகளை அடையாளம் காட்டுமாறு மாவட்ட செயலர் கடிதம் மூலம் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்

No comments