Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஐந்தாண்டிற்குள் அபிவிருத்தியடையவுள்ள யாழ்.நகர் - முதல்கட்டமாக 250 மில்லியன் ஒதுக்கீடு


யாழ் நகரை இவ்வாண்டிலிருந்து 05 ஆண்டிற்குள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு, முதல் கட்டமாக இவ்வாண்டு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  tamilnews1

இலங்கையில் 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்திற்கு அமைய - வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தலைமையில் நடைபெற்றது.  tamilnews1

அதில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,  

யாழ் நகரை இவ்வாண்டிலிருந்து 05 ஆண்டு திட்டத்திற்கமைய அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, முதல் கட்டமாக இவ்வாண்டு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.  tamilnews1

மேலும் பழைய பேரூந்து நிலையம் தொடர்பாகவும், யாழ் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தின்  திண்மக்கழிவு அகற்றலில் உள்ள பிரச்சனை  தொடர்பாகவும் இதற்கான முன்மொழிவுகள் மற்றும்  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட தரப்புடன் விரிவாக ஆராயப்பட்டது.  tamilnews1

அதேவேளை போக்குவரத்து சேவைகளை இலகுபடுத்த  யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை (Metro Bus) வழங்க நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் உறுதியளித்தார்.  tamilnews1

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான  கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர், மேலதிக செயலர்  (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,  வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளர்,  யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள்,  துறைசார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.   tamilnews1








No comments