Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆதவ் அர்ஜுனா - அருச்சுனா சென்னையில் சந்திப்பு


தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

தமிழக அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நல்லுறவு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, தாயகம் மற்றும் தமிழகத்தில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வு, இருநாட்டு மீனவர்களுக்கிடையேயான புரிந்துணர்வு மற்றும் அவர்களது பாதுகாப்பு குறித்த விவகாரங்கள், இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சமூக ரீதியான கூட்டு வளர்ச்சி போன்ற விடயங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பு குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தமிழ் மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வருங்காலம் என்ற புள்ளியில் ஆரோக்கியமான உறவில் பயணிப்போம் என்று ஒருவருக்கொருவர் தெரிவித்து மகிழ்ந்தோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments