Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கற்றல் வளங்களை வழங்குவதே எமது நோக்காகும்


மாணவர்களுக்கு தரமான கல்விச் சூழலை உருவாக்குவதும், நவீன வசதிகளுடன் கூடிய கற்றல் வளங்களை வழங்குவதும் எமது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் மாகாணத்திற்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் ஊடாக 2026ஆம் ஆண்டுக்கான மாகாண கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களுக்கு தரமான கல்விச் சூழலை உருவாக்குவதும், நவீன வசதிகளுடன் கூடிய கற்றல் வளங்களை வழங்குவதும் எமது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.

அந்த இலக்கை நோக்கி முன்னெடுக்கப்படும் இந்த புதிய வகுப்பறை கட்டிடம், எதிர்கால தலைமுறையின் கல்விப் பயணத்திற்கு உறுதியான பங்களிப்பாக அமையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான  கருணநாதன் இளங்குமரன் மற்றும் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலைப் பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.








No comments