யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு கடலுக்கு சென்றவர் கடலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அராலி மத்தியை சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த கடற்தொழிலாளி இன்றைய தினம் வியாழக்கிழமை காலை தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் , மதியம் அவரது சடலம் கடலில் மிதந்த நிலையில் , சக கடற்தொழிலாளர்களால் அடையாளம் காணப்பட்டு , மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









No comments