Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல்


மூதூர் - மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை  அனுஷ்டிக்கப்பட்டது.

மூதூர் - மணற்சேனை இந்து மயான முன்றலில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலை குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி ஒருநிமிட மௌன பிரார்த்தனை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி, மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

1986.07.16 அன்று கிராமத்திற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட இவ் தாக்குதல் சம்பவத்தில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   







No comments