Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கன்னியாவில் எதனையும் புதிதாக கட்டவில்லை - யாழில் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர்


திருகோணமலை கன்னியா பகுதியில் புதிதாக எந்த வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ,  ஏற்கனவே உள்ள தொல்பொருள்கள் மற்றும் நினைவிடங்கள் பாதுகாக்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் வீதி ஒன்றின் பெயர்பலகையை திரைநீக்கும் நிகழ்வில் கலந்துகொண்டவரிடம் , கன்னியா பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கட்டட பணிகள் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி ஒரு தொல்லியல் தளமாகும். அது தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமானது என  வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பகுதியாகும்.

அதன் பிரகாரம், அங்குள்ள தொல்பொருட்களைப் பாதுகாத்து பராமரிப்பதற்கு தொல்லியல் திணைக்களத்திற்கு முழு அதிகாரம் உள்ளது.

அங்கு புதிதாக எந்தக் கட்டுமானங்களையும் அமைப்பது எமது நோக்கம் அல்ல என தெரிவித்தார். 


No comments