குடும்ப தகராறில் தாய் தந்தையர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் 58 வயதுடைய நபரும் 54 வயதுடைய அவருடைய மனைவியும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அவர்களின் 26 வயதுடைய மகனை கைது செய்துள்ளனர்
ஆரம்ப கட்ட விசாரணைகளில் குடும்ப தகராறு காரணமாக தாய் தந்தையரை குறித்த இளைஞனே தாக்கி படுகொலை செய்ததாக தெரியவந்துள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்னர்.









No comments