கதிர்காம பாதயாத்திரையில் கலந்துகொண்டு பயணித்த மேலும் ஒரு யாத்திரிகர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அம்பாறை - பாணமை பகுதியில் உயிரிழந்துள்ளார்.
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இவ்வாண்டுக்கான கதிர்காம பாதயாத்திரையின் போது கடந்த 8ஆம் திகதி பொத்துவில் - குண்டுமடு பகுதியில் வவுனியாவைச் சேர்ந்த யாத்திரிகர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.









No comments