தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தியாக தீபத்தின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதன் போது , நினைவிடத்தில் தியாக தீபத்தின் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டு , உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை , தியாக தீபம் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியிலும் சம நேரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.





.jpeg)



No comments