அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் வயலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து சுற்று வட்டாரங்களில் வசித்த 1600 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் பக்ஜான் பகுதியில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் வயலில் கடந்த 14 நாட்களாக எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) குறித்த பகுதியில் தீபற்றியுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதியில் வசித்து வந்த 1600 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எண்ணெய் வயலுக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவில் திப்ரு சைகோவா தேசிய உயிரியல் பூங்கா மற்றும் உயிரின பாதுகாப்பு பூங்காக்கள் அமைந்துள்ளன. விபத்தால் இவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
வயல் வெளிகள் மற்றும் தேயிலை தோட்டங்களிலும் எரிவாயுவின் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அங்கு பணியாற்றும் தொழிலாளர்களும் விவசாயிகளும் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments