Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் விபத்து - மூவர் படுகாயம்


கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

முறிகண்டி பகுதியிலிருந்து கிளிநொச்சி நகர் நோக்கி ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

அதே திசையில் பயணித்த மற்றுமொரு வாகனத்தை கடக்க முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் அவதானித்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது, குறித்த மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணையை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments