2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு அறிவிக்கப்பட்ட திகதிகளைத் திருத்தத் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
2020 க.பொ.த உயர்தரப் பரீட்சை செப்டம்பர் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயர் தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு சில தரப்புகள் கல்வி அமைச்சிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது









No comments