தென்கிழக்கு பங்களாதேஷில் கொரோனா வைரஸால் மேலும் இரண்டு ரோஹிங்கிய அகதிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடான மியான்மாரில் வன்முறையிலிருந்து தப்பி ஓடிய சுமார் ஒரு மில்லியன் ரோஹிங்கிய முஸ்லிம்கள், எல்லை மாவட்டமான காக்ஸ் பஜாரில் உள்ள அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இதுவரை தொற்று உறுதியான 35 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க அதிகாரிகள் முகாம்களுக்குள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments