மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1,100 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கைரேகை அடையாளங்களை பயன்படுத்திய 93 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 402 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேர திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments