Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அஸாமில் சீரற்ற காலநிலை - 122 உயிரிழப்பு - 37 இலட்சம் பேர் பாதிப்பு!


நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அஸாம் மாநிலத்தில் இதுவரை 37 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த அனர்த்தத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் பீகாரில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை மேற்கு வங்கம், அஸாம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைப் பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments