நாட்டில் மேலும் 22 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று இடம்பெற்ற பிசிஆர் பிரசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 752 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
அவர்களில் 2 ஆயிரத்து 64 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வைத்தியசாலைகளில் தற்போது 677 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.







No comments