Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஊடகங்களால் கொல்லப்பட்டவர் சிகிச்சைக்காக கொழும்பிற்கு மாற்றம்!


கிளிநொச்சியில் அண்மையில் யானையின் தாக்குதலில் காயமடைந்த விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்சி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்..

யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று (புதன்கிழமை) மாலை மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம், பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான கொழும்பு, களனிய பகுதியைச் சேர்ந்த காயத்திரி டில்ருக்சி (வயது-32) கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள விகாரைக்கு வழிபாட்டுக்கு சென்று விடுதிக்குத் திரும்பிய வேளை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.

அதில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசானைவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை குறித்த விரிவுரையாளர் உயிரிழந்துவிட்டார் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருந்தது. 

அந்நிலையில் விரிவுரையாளர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதனை அன்றைய தினம் உறுமல் செய்திகள் வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி, விரிவுரையாளர் உயிருடன் உள்ளார் என செய்தி வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அது தொடர்பிலான செய்தி இணைப்பு. 

No comments