Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கையில் கொரோனாவால் 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, மஹரகம அபேக்ஸா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தங்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை இனங்காணப்பட்டு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து, நேற்று உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா, இரத்தம் நஞ்சானமை மற்றும் கடுமையான லுகேமியா நோய் நிலைமையென அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கொழும்பு -7 பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 20ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்துக்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா நோய் நிலைமையென அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments