Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையில்!



நாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.

இவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேலும் 15 வருடங்கள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குகளை விசாரணை செய்வதை துரிதப்படுத்துவதற்காக, நீதிமன்றங்கள் மற்றும் நீதவான்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, சிறைச்சாலைகளுக்குள் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக சுமார் 8 ஆயிரம் கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை ஒரு வருட காலத்திற்கு புனர்வாழ்வளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments