Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திருநெல்வேலியில் அடையாளம் காணப்பட்டவர் மருதனார் மடத்துடன் தொடர்புடையவர்



திருநெல்வேலி சந்தையில் வைத்து பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட நபர், மருதனார்மடம் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதனால் மருதனார்மடம் கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது.

மருதனார்மடம் சந்தி கடைத் தொகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணியாற்றும் உரும்பிராயைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருக்கு கோரோனா தோற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தபட்டது.

திருநெல்வேலி சந்தையில் நேற்றுமுன்தினம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்ட போது, அவர் சந்தையில் இருந்தததால் அவரது மாதிரியும் பெறப்பட்டது.

இந்த நிலையிலேயே திருநெல்வேலி சந்தை வியாபாரிகளுடன் இணைந்த பரிசோதையில் அவருடைய மாதிரிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments