மியன்மார் படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில், யாங்கோனின் பல மாவட்டங்களுக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து மியன்மார் படையினர் பிரதான நகரமான யாங்கோனில் ஒரே இரவில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் இருப்பினும் அவர்களை கைது செய்வதற்கான காரணம் குறித்த தகவல்களை படையினர் வெளியிடவில்லை
தலைவர் ஆங் சான் சூகியை சிறைபிடித்து பெப்ரவரி மாதம் முதல் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாட்டில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
சனிக்கிழமை மியான்மாரின் மிகப்பெரிய நகரமான யாங்கோனில் போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இருப்பினும் குறித்த போராட்டத்தில் உயிரிழந்த அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அத்தோடு இதுவரை இடம்பெற்ற போராட்டங்களில் 50 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.