வீதியில் சாரதியை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் பிரிவை சேர்ந்த கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மகரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பன்னிப்பிட்டிய வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் பிரிவை சேர்ந்த கான்ஸ்டபிள் கனகர வாகன சாரதியை வீதியில் வைத்து மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்காகி கீழே விழுந்த சாரதி மீது மல்யுத்த (ரெஸ்லிங்) போட்டிகளில் தாக்குவது போன்று எகிறி குதித்து தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் காணொளியாக பதிவு செய்து அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். குறித்த காணொளி வைரலாகி பலரும் தமது கடும் கண்டனங்களை தெரிவித்ததை அடுத்து , குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது விசாரணைகளை பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து வெளியாகியுள்ள கேலி சித்திரம்.
முன்னணி இணைய வழியூடான விற்பனை தளம் ஒன்றின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள படம்.
No comments