கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா இணங்கியுள்ளதாக வௌியான கருத்தினை அந்நாட்டு வௌியுறவுத்துறை அமைச்சு உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது.
இலங்கையின் மேற்கு முனையத்தில் முதலீடு செய்வதற்கு அதானி நிறுவனத்தின் முன்மொழிவுக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணங்கியுள்ளதாக வௌியான செய்தியில் உண்மை இல்லை எனவும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை 35 வருடகால ஒப்பந்த அடிப்படையில் ஜப்பானுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய இந்தியா இணங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக வெவ்வேறுபட்ட கருத்துக்கள் வெளியானதை தொடர்ந்தே இந்திய வௌியுறவுத்துறை அமைச்சு இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளது.
No comments