Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில்?



கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை, விரைவில் பல்கலைக் கழகங்களுக்கு உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, ஏப்ரலில் வௌியிடப்படும் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்யப்படும் மாணவர்களை, வரும் செப்டம்பரில் பல்கலைக் கழகங்களில் இணைத்துக்கொள்ள உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இதன் பெறுபெறுகள் எதிர்வரும் ஜூனில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

No comments