Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் ஐவர் கைது!



கஞ்சா மற்றும் கெரோயினுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஐவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் பிரதிப் கப்புலியத்த தலைமையிலான பொலிஸார் நேற்றைய தினம் மேற்கொண்டு சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது.

யாழ் குருநகர் பகுதி தண்ணீர் தாங்கி வீதியில் உள்ள வீடோன்றில் வைத்து கெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 3 கிராம் தூய கெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் அப்பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை யாழ் மணியந்தோட்டம் பகுதியில் நுகர்வு மற்றும் விற்பனைக்காக கெரோயின் போதைப்பொருளை கையிருப்பில் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்ட நபர்கள் 23, 21 மற்றும் 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 3 கிராம் கெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ் குருநகர் பகுதியில் கடற்கரைவீதியில் விற்பனைக்காக வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 1 கிலோ 370 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாரை கண்டதும் கஞ்சாவை தீயிட்டு கொழுத்த முற்பட்டவேளை குறித்த நபரை பொலிஸார் கைது செய்யதுடன் கஞ்சாவையும் மீட்டனர் கைது செய்யப்பட்ட நபர் அப்பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்

No comments