நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 497 ஆக அதிகரித்துள்ளது.
தொடாங்கொட, கொழும்பு, கொலன்னாவ, பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
82 மற்றும் 65 வயதுடைய ஆண்கள் இருவரும் 53 மற்றும் 77 வயதுடைய பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 376 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது.
இதவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 448 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, தொற்றுக்கு உள்ளான 3 ஆயிரத்து 70 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments