Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அழுத்தங்களுக்கு மத்தியில் நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை

மாகாண சபை தேர்தலை இந்தியா அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 
 தற்பொழுது ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் நடைபெறுகின்றது. இந்த விடயத்திற்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் மேற்கண்டவாறு. பதிலளித்தார்.

 முன்னைய அரசாங்கத்தினால் மாகாண சபை தேர்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பிரேரணையின் போது அது காலவரையறை இன்றி ஒத்திபோடப்பட்டது. இதனால் மாகாண சபை தேர்தல் நடைபெறுவதில் ஏற்பட்ட சட்ட ரீதியிலான தடைகளை நீக்குவதற்காக அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபை எமது அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments