Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புர்காவிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாது

இலங்கையில் புர்காவிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாதுஎன அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்தார்.

புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வது குறித்து தற்போது பரசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், புர்கா மற்றும் நிகாப்பிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாதென்றும் குறிப்பிட்டார்.

ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்துக்குப் பின்னரே புர்கா மற்றும் நிகாப்பிற்கு  அரசாங்கம் தடை விதிக்கும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புர்கா மற்றும் பதிவுசெய்யப்படாத மதரஸா பாடசாலைகளை தடை செய்தல் தொடர்பான பிரேரணையொன்றில் கடந்த 13ஆம் திகதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கையெழுத்திட்டார்.

அதன் பின்னர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் புர்காவை தடை செய்வது தொடர்பான பிரேரணை நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments