Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அபிவிருத்தி லொத்தர் வெற்றியாளர்களுக்கு காசோலைகள்


அபிவிருத்தி லொத்தர் சபையின் 'சுப்பர்போல்' மற்றும் ராசி அதிஷ்டம்' சீட்டிழுப்பின் வெற்றியாளர்கள் ஐவருக்கு பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத்னால் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.


இந்த நிகழ்வு இன்று (30)  அலரி மாளிகையில்  இடம்பெற்றது. அதன்போது 'சுப்பர் போல்' 1403 வது சீட்டிழுப்பின் சுப்பர் பரிசுத் தொகையான ரூபாய் 75,412,110 இனை வெற்றிபெற்ற கெகிராவ பிரதேசத்தை சேர்ந்த திரு.கே.ஜி.ரொஷான் உள்ளிட்ட வெற்றியாளர்களுக்கு பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத்  பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

'ராசி அதிஷ்டம்' 3096 வது சீட்டிழுப்பின் சுப்பர் பரிசுத்தொகையான ரூபாய் 2,454,571 ஐ வெற்றிபெற்ற ஹிங்குராணவை சேர்ந்த திரு.ஆரியதாச, 'ராசி அதிஷ்டம்' 3098 வது சீட்டிழுப்பின் சுப்பர் பரிசுத்தொகையான ரூபாய் 2,230,396 ஐ வெற்றிபெற்ற கடவத்தவினை சேர்ந்த திரு.எச்.பீ.துசந்த மற்றும் 'ராசி அதிஷ்டம்' 3089 வது சீட்டிழுப்பின் சுப்பர் பரிசுத்தொகையான ரூபாய் 2,347,887 ஐ வெற்றிபெற்ற கண்டியை சேர்ந்த திருமதி.எச்.ஜீ.பீரிஸ் ஆகியோரும் தங்களுக்குரிய பரிசு காசோலைகளை பெற்றுக் கொண்டனர்.

இவ்வெற்றிக்குரிய லொத்தர்கள் தம்புள்ளை விற்பனை முகவர் திரு.பீ.எச்.எஸ்.ரத்னவிபூஷண, ஹிங்குரான விற்பனை முகவர் திரு.கே.ஏ.எல்.ஸ்வர்ணகுமார, ரன்முதுகல விற்பனை முகவர் திரு.பீ.ஏ.சந்திரசிறி மற்றும் பகமூன விற்பனை முகவர் திருமதி.கே.யூ.ஐ.லக்மாலி ஆகியோரினால் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு.அமித கமகே உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments