Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

'பிரக்ஞாபந்து' புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஆரம்பம்

 


பிரக்ஞாபந்து' புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  ிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றது.


சாதாரணத் தரப் பரீட்சையில் விசேட சித்தி எய்திய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்காக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய உயர் தரம் பயில்வதற்கு 'பிரக்ஞாபந்து' புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.

'பிரக்ஞாபந்து' புலமைப்பரிசில் அறக்கட்டளையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

அதனை தொடர்ந்து அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களினால் 'பிரக்ஞாபந்து' புலமைப்பரிசில் அறக்கட்டளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்களுக்கு வழங்கப்பட்டது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் 10 மில்லியன் ரூபாய் நிதியில் 'பிரக்ஞாபந்து' புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்த தினத்தை (16) முன்னிட்டு இப்புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பது விசேடம்சமாகும்.

தனிப்பட்ட ரீதியில் எவரும் பங்களிக்கக்கூடிய இத்திட்டத்தின் ஆரம்பத்தின்போதே தனியார் நிறுவனங்கள் மற்றும் கொடையாளிகளிடமிருந்து 150 இலட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, நிமல் சிறிபால த சில்வா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, சிசிர ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments