இலங்கை - இந்தோனேசிய பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், மிதமான போக்கை கடைப்பிடிக்கும் முஸ்லிம் நாடான இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழமான அரசியல் கலாசார உறவு தொன்றுதொட்டு காணப்பட்டது. அந்த பிணைப்பை காத்திரமாக மீண்டும் கட்டியெழுப்ப, கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வேனென நம்பிக்கை தெரிவித்தார்.
No comments