உலக காசநோய் தினம் இன்றாகும். இலங்கையில் காசநோயினால் ஒரு வருடத்திற்கு 500 க்கு மேற்பட்டவர்களும் 600 க்கு உட்பட்டவர்களும் உயிரிழப்பதாக சுகாதார அறிக்கைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளின்படி, இந்நாட்டினுள் இனங்காணப்படாத காச நோயாளர்கள் கிட்டத்தட்ட 4000 க்கும் 5000 க்கும் இடைப்பட்டவர்கள் சமூகத்தில் இருப்பதாக காச நோய் ஒழிப்பு மற்றும் மார்பு நோய் சம்பந்தப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் சமூகம் மருத்துவர் சுவனி தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதார அறிக்கைகளின்படி குழந்தைகளுக்கு காச நோய் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments