கல்கிஸ்ஸ, தர்மபாலாதிராதிபதி, ஹோ
கம்பஹா மாவட்டத்தில் கொடுகொட கிராமத்தைச் சேர்ந்த ஏழு சகோதர சகோதரிகளை கொண்ட ஒரு பிரபு குடும்பத்தின் இளையவராக வணக்கத்திற்குரிய தம்மவாச தேரர் 1933 ஜனவரி 26ஆம் திகதி பிறந்தார்.
இரத்மலானை பரமதம்மசேதிய பிரிவென மற்றும் மாளிகாவத்தை வித்யோத்ய பிரிவெனா கல்லூரிகளில் ஒரு பிக்குவிற்கு தேவையான சிங்களம், பாலி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற அவர், தனது 20ஆவது வயதிலேயே உபசம்பதா பூமிக்கு நியமிக்கப்பட்டார்.
புத்தரின் போதனைகளின்படி, ஒரு பிக்குவுக்கு கண்ணியம், அடக்கம், போன்றன இருக்க வேண்டும் என்பது நாயக்க தேரரில் எப்போதும் தெளிவாகத் தெரிந்தது.
கேட்கும் பார்க்கும் அனைவரிலும் பரவச உணர்வை உருவாக்கக்கூடிய நாயக்க தேரருக்கு ஒரு இனிமையான குரலும், தொடர்ந்து பாயும் சொற்களஞ்சியம் மற்றும் தொடக்கமும் முடிவும் பொருந்தக்கூடிய தனித்துவமான ஒரு பாணி உள்ளது. அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தர்ம போதனைகளை நடத்துவதிலும் வல்லமை கொண்டவர்.
தம்மவாச தேரர் பல வெளிநாடுகளுக்கு தர்ம யாத்திரை மேற்கொண்டுள்ளதுடன், அங்கு அவரால் நடத்தப்படும் தர்ம போதனைகளினால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் அவரின் நிமித்தம் பர்மாவிலுள்ள இலங்கரமய மற்றும் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள சாரமதி விகாரையில் பூஜைகளில் ஈடுபட்டனர்.
தர்ம போதனைகளை நிகழ்த்துவதுடன் நின்றுவிடாத வணக்கத்திற்குரிய தேரர் பல தர்ம புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். அவற்றில் கொசொல் மன்னரின் கனவுகள், கேதுமதி இராச்சியம் மற்றும் தம்மோஹவே ரக்கதி தம்ம சாரி ஆகியவை பிரபலமான புத்தகங்களாகும்.
பௌத்த பிக்கு ஒருவருக்கான பாத்திரத்தை சிறப்பாக ஆற்றிய தம்மவாச தேரர், ஒரு முன்மாதிரியான, ஒழுக்கமான மற்றும் நல்லொழுக்கமுள்ள தேரொருவராவார். அவர் முழு பிக்கு தலைமுறைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்;காட்டாகிறார்.
சுமார் 12 ஆயிரம் பிக்குமார் மற்றும் சுமார் 3 ஆயிரம் விகாரைகளை கொண்ட ஒட்டுமொத்த அமரபுர மஹாநிகாயவிற்கு தலைமைத்துவம் வழங்கிய வணக்கத்திற்குரிய தேரர், இதற்கு மேலதிகமாக மேலும் பல பதவிகளையும் வகித்து வந்தார்.
வணக்கத்திற்குரிய தவுல்தென ஞானிஸ்ஸர மஹாசாயக்க தேரரின் மறைவை தொடர்ந்து அமரபுர மஹாநிகாயவின் உயர்வான மஹாநாயக்கர் என்ற பட்டத்தைப் பெற தம்மவாச தேரர் ஆசீர்வதிக்கப்பட்டார்தனக்கு வழங்கப்பட்ட பதவிகளைப் பற்றி அவர் ஒருபோதும் பெருமை பேசவில்லை. அவர் எப்போதும், 'நான் ஒரு துறவியாக செயல்பட்டேன், யாருடைய பதவியையும் புகழையும் பெறவில்லை.' என்று கூறுவார்.அவரது இந்த தாழ்மையான தன்மை மற்றும் புலமை காரணமாக, பர்மா அரசாங்கம் அவருக்கு அக்கமஹா பண்டிதர் என்ற பட்டத்தை வழங்கியது.
தம்மவாச தேரரின் மறைவால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது.எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், எனது அரசியல் பயணத்திலும், ஒரு நண்பராகவும் ஆசிரியராகவும் வழங்கிய பல்வேறு அறிவுரைகளையும் ஆசீர்வாதங்களையும் அவருக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம், இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அனைத்து சடங்குகளும் அசாத்தியமானவை.
இரு புத்த பெருமானின் வார்த்தையாகும்.
88 ஆண்டுகளாக மக்களுக்கு ஒரு பயனுள்ள சேவையை ஆற்றிய வணக்கத்திற்குரிய கொடுகொட தம்மவாச தேரரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
ஒட்டுமொத்த அமரபுர மஹாநிகாயவின் பதில் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய கந்துனே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட அனைத்து பிக்கு மகா சங்கத்திற்கும். பிக்கு மாணவர்களுக்கும், அனைத்து உறவினர்களுக்கும், பிரதேசவாசி
மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்
பிரதமர்