Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, June 22

Pages

Breaking News

பிரதமரின் இரங்கல் செய்தி


 கல்கிஸ்ஸதர்மபாலாதிராதிபதிஹோமாகம ஸ்ரீலங்கா பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் மஹா மஹோபாத்யாயதர்மபால வங்ஷாலங்கார சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ திரிபிடக விஷாரதபிரவச்சன கீர்த்தி ஸ்ரீ ஷாசன ஷோபனஸ்ரீ சுமங்கள வித்யாவதங்சஅக்கமஹா பண்டிதஸ்ரீலங்கா அமரபுர மஹாநிகாயவின் மஹாநாயக்கர்கௌரவ கொடுகொட தம்மவாச தேரரின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.


கம்பஹா மாவட்டத்தில் கொடுகொட கிராமத்தைச் சேர்ந்த ஏழு சகோதர சகோதரிகளை கொண்ட ஒரு பிரபு குடும்பத்தின் இளையவராக வணக்கத்திற்குரிய தம்மவாச தேரர் 1933 ஜனவரி 26ஆம் திகதி பிறந்தார்.


இரத்மலானை பரமதம்மசேதிய பிரிவென மற்றும் மாளிகாவத்தை வித்யோத்ய பிரிவெனா கல்லூரிகளில் ஒரு பிக்குவிற்கு தேவையான சிங்களம்பாலிசமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற அவர்தனது 20ஆவது வயதிலேயே உபசம்பதா பூமிக்கு நியமிக்கப்பட்டார்.


புத்தரின் போதனைகளின்படிஒரு பிக்குவுக்கு கண்ணியம்அடக்கம்போன்றன இருக்க வேண்டும் என்பது நாயக்க தேரரில் எப்போதும் தெளிவாகத் தெரிந்தது.


கேட்கும் பார்க்கும் அனைவரிலும் பரவச உணர்வை உருவாக்கக்கூடிய நாயக்க தேரருக்கு ஒரு இனிமையான குரலும்தொடர்ந்து பாயும் சொற்களஞ்சியம் மற்றும் தொடக்கமும் முடிவும் பொருந்தக்கூடிய தனித்துவமான ஒரு பாணி உள்ளது. அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தர்ம போதனைகளை நடத்துவதிலும் வல்லமை கொண்டவர்.


தம்மவாச தேரர் பல வெளிநாடுகளுக்கு தர்ம யாத்திரை மேற்கொண்டுள்ளதுடன்அங்கு அவரால் நடத்தப்படும் தர்ம போதனைகளினால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் அவரின் நிமித்தம் பர்மாவிலுள்ள இலங்கரமய மற்றும் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள சாரமதி விகாரையில் பூஜைகளில் ஈடுபட்டனர்.


தர்ம போதனைகளை நிகழ்த்துவதுடன் நின்றுவிடாத வணக்கத்திற்குரிய தேரர் பல தர்ம புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். அவற்றில் கொசொல் மன்னரின் கனவுகள்கேதுமதி இராச்சியம் மற்றும் தம்மோஹவே ரக்கதி தம்ம சாரி ஆகியவை பிரபலமான புத்தகங்களாகும்.


பௌத்த பிக்கு ஒருவருக்கான பாத்திரத்தை சிறப்பாக ஆற்றிய தம்மவாச தேரர்ஒரு முன்மாதிரியானஒழுக்கமான மற்றும் நல்லொழுக்கமுள்ள தேரொருவராவார். அவர் முழு பிக்கு தலைமுறைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்;காட்டாகிறார்.

சுமார் 12 ஆயிரம் பிக்குமார் மற்றும் சுமார் 3 ஆயிரம் விகாரைகளை கொண்ட ஒட்டுமொத்த அமரபுர மஹாநிகாயவிற்கு தலைமைத்துவம் வழங்கிய வணக்கத்திற்குரிய தேரர்இதற்கு மேலதிகமாக  மேலும் பல பதவிகளையும் வகித்து வந்தார்.


வணக்கத்திற்குரிய தவுல்தென ஞானிஸ்ஸர மஹாசாயக்க தேரரின் மறைவை தொடர்ந்து அமரபுர மஹாநிகாயவின் உயர்வான மஹாநாயக்கர் என்ற பட்டத்தைப் பெற தம்மவாச தேரர் ஆசீர்வதிக்கப்பட்டார்தனக்கு வழங்கப்பட்ட பதவிகளைப் பற்றி அவர் ஒருபோதும் பெருமை பேசவில்லை. அவர் எப்போதும், 'நான் ஒரு துறவியாக செயல்பட்டேன்யாருடைய பதவியையும் புகழையும் பெறவில்லை.என்று கூறுவார்.அவரது இந்த தாழ்மையான தன்மை மற்றும் புலமை காரணமாகபர்மா அரசாங்கம் அவருக்கு அக்கமஹா பண்டிதர் என்ற பட்டத்தை  வழங்கியது.


தம்மவாச தேரரின் மறைவால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது.எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும்எனது அரசியல் பயணத்திலும்ஒரு நண்பராகவும் ஆசிரியராகவும் வழங்கிய பல்வேறு அறிவுரைகளையும் ஆசீர்வாதங்களையும் அவருக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம்இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.


அனைத்து சடங்குகளும் அசாத்தியமானவை.

இரு புத்த பெருமானின் வார்த்தையாகும்.

 

88 ஆண்டுகளாக மக்களுக்கு ஒரு பயனுள்ள சேவையை ஆற்றிய வணக்கத்திற்குரிய கொடுகொட தம்மவாச தேரரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

ஒட்டுமொத்த அமரபுர மஹாநிகாயவின் பதில் மஹாநாயக்கர்  வணக்கத்திற்குரிய கந்துனே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட அனைத்து பிக்கு மகா சங்கத்திற்கும். பிக்கு மாணவர்களுக்கும்அனைத்து உறவினர்களுக்கும்பிரதேசவாசிகளுக்கும் எனlது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 

பிரதமர்