எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்கு 25% வேட்புமனுக்கள் பெண் வேட்பாளர்களுக்குஒதுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) கட்சி தலைமையகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்விலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மாநில மற்றும் மாகாண ரீதியில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க மகளிர் பிரிவின் தலைவர்முன்வைத்த குறித்த திட்டம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் உள்ளூர் அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் உறுதியாக இருப்பதாகஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
No comments