Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சமூக வலைதளங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு!



ரஷ்யாவில் குழந்தைகளை போராட்டத்திற்கு தூண்டும் வகையில் இருந்த பதிவுகளை நீக்கத் தவறியதற்காக டுவிட்டர், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸாண்டர் நவால்னி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது சிறுவர்களை போராடத்தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் ரஷ்ய அரசாங்கம் உத்தரவிட்டது.

எனினும், பதிவுகள் நீக்கப்படாமல் இருந்தமையினைத் தொடர்ந்து டிக்டொக், டெலிகிராம், முகநூல், கூகுள் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

No comments