Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ரஞ்சனின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான விடயத்தில் கால அவகாசம் நீடிப்பு

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கும் வகையில் வழங்கப்பட்ட உத்தரவு மார்ச் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சிறைவாசம் காரணமாக தனது நாடாளுமன்ற ஆசனத்தை நீக்குவதைத் தடுக்க இடைக்கால தடை உத்தரவு கோரி ரஞ்சன் ராமநாயக்க மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு நேற்று (செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் அர்ஜுன ஒபயசேகர தலைமையிலான நீதிமன்ற அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஜனவரி 12 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments