அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலராடோ மாகாணத்தில் போல்டர் என்ற இடத்தில் உள்ள கிங் சூப்பர் என்ற பல்பொருள் அங்காடியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு இடம்பெற்றது.
குறித்த பல்பொருள் அங்காடியில் நுழைந்த மர்ம நபரொருவர் அங்கிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
அதன் போது,பொலிஸ் அதிகாரியொருவர் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்த பொலிஸார் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம் அட்லாண்டாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் அங்கு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments