கொழும்பு ராஜகிரிய பகுதியில் இன்றைய தினம் காலை இடம்பெற்ற விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸார் பாரவூர்தி ஒன்றினை மறித்து அவற்றின் ஆவணங்களை சரி பார்த்துக்கொண்டு இருந்த வேளை , அதிவேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் அவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
குறித்த விபத்தில் கடமையிலிருந்த உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பாரவூர்தியின் சாரதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஹயஸ் வாகன சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments