Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தலைக்கவசம் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம்

எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் பொறிக்கப்பட்ட தலைக்கவசத்தின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு யாழ். மாவட்ட செயலக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச பாவனையாளர் தினத்தை (மார்ச்- 15)  முன்னிட்டு யாழ். மாவட்ட செயலக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் A.L.J. சாதிக் (வடமாகாணம்)  தலைமையில் திருநெல்வேலி, சாவகச்சேரி பகுதிகளில், கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் பொறிக்கப்பட்ட தலைக்கவசத்தின் முக்கியத்துவம் எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ் விழிப்புணர்வு நிகழ்வின் போது வீதியால் செல்லும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பொலிஸாரால் நிறுத்தப்பட்டு பாவனையாளர்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்களால்  எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் பொறிக்கப்பட்ட தலைக்கவசம் தொடர்பான தெளிவூட்டல் வழங்கப்பட்டது

No comments