இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அதன்படி, கோவிட் 19 தடுப்பூசிக்கான பரிந்துரைக்கப்பட்ட அளவை முடித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இலங்கை குடிமக்கள், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் வெளிநாட்டினர் இலங்கைக்கு வந்து விமான நிலையத்தில் (ஆங்கில மொழிபெயர்ப்பு உள்பட)
தடுப்பூசி தொடர்பான சான்றிதழின் அசல் நகலை விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர் அவர்கள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 24 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
பி.சி.ஆர் அறிக்கையின் முடிவுகளின்படி, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்ல பயண ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வீடு திரும்பிய பின்னர் அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒழுங்காக தடுப்பூசி போட்டு பி.சி.ஆர் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட தேவையில்லை.
வீட்டிற்கு வந்து 7 நாள்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இவர்களில் யாராவது மன அழுத்தம் அல்லது பிற அறிகுறிகளைக் காட்டினால், அவர்கள் உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்என்றுள்ளது.
No comments