Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படும்


இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் குறித்த விஜயம் அமைந்துள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் அவர் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் உட்பட 37 பேர் கொண்ட சீன உயர்மட்ட குழு நேற்று இரவு 10:50 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.

குறித்த விஜயத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபரில் சீனாவின் மூத்த இராஜதந்திரி யாங் ஜீச்சியின் விஜயத்தைத் தொடர்ந்து சீன அதிகாரி ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டாவது உயர்மட்ட விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments