திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளருக்கு வழங்கப்பட்ட மகுடம் சில நொடிகளில் பறிக்கப்பட்டு மற்றுமொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எழுந்த சர்ச்சையை அடுத்து பறிக்கப்பட்ட மகுடத்தை மீண்டும் அவரிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தாமரை தடாக அரங்கில் நேற்று (04) இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த போட்டியில் திருமதி புஷ்பிகா டி சில்வா, வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது, போட்டியில் பங்குப்பற்றுபவர்கள் திருமணமானராக இருக்க வேண்டும் என்றும் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என விதிமுறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகுடம் சூட்டப்பட்ட திருமதி புஷ்பிகா டி சில்வா, ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர் என்றும் இதனால் போட்டியில் வெற்றி பெற தகுதியற்றவர் என மீண்டும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, திருமதி புஷ்பிகா டி சில்வாவுக்கு சூட்டப்பட்ட மகுடம், மேடையிலேயே மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டாவது இடத்தை பெற்ற திருமதி ருவந்திக்கு சூட்டப்பட்டது
இந்த நிலையில், புஸ்பிகா விவகாரத்தானவர் என்பதனை நிரூபிப்பதற்கு எவ்வித எழுத்து மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் அவருக்கே இந்த பட்டத்தை மீள வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தான் உச்சந்தலையில் காயமடைந்ததாக தெரிவித்து புஷ்பிகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், நடுவர் சபைக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடும் செய்துள்ளார்.
இந்நிலையில் புஷ்பிகா தகுதிவாய்ந்த வெற்றியாளர் என்பதால் நாளை மீண்டும் அவருக்கு முடிசூட்டப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் இந்நிலையில் நடுவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காணொளி :- நன்றி Dailymirror
No comments