Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆப்ரிக்கவில் படகு விபத்து 42 பேர் உயிரிழப்பு!

ஆப்ரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில்  42 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏமனைச் சேர்ந்த 60இற்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் ஜரோப்பா நோக்கி பயணித்த நிலையில், வடகிழக்கு ஆப்ரிக்க நாடான ஜிபூட்டி அருகே குறித்த  படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கிய நிலையில், விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜிபூட்டி நாட்டின் கடலோர காவல் படையினர் மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.

எனினும் அவர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னரே, பெண்கள், சிறுவர்கள் உட்பட 42 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அதேநேரம், நீரில் தத்தளித்த 14 பேரை கடலோர காவல்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

மேலும் இந்த விபத்தில் சுமார் 10 பேர் காணாமல்போன நிலையில், அவர்களைத் தேடும் பணிகளில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments