Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700யைக் கடந்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாங்கோனுக்கு வடகிழக்கில் 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் உள்ள பாகோ நகரில் இடம்பெற்ற போராட்டத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 82பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தற்போது உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 700யைக் கடந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை இராணுவத்தினர் எடுத்துச் சென்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க இயலாத சூழல் நிலவுகிறது.

இதேவேளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாண்டலேயில் உள்ள மியாவடி வங்கியின் மிகப்பெரிய கிளை மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் போது பாதுகாப்பு காவலர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன

No comments